‘வந்தே மாதரம்’ அவமதித்தால் 3 ஆண்டு சிறை? புதிய சட்டம்!’

வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தாலோ அல்லது அதை பாடுவதைத் தடுத்தாலோ, 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மசோதா, தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு எதிரான அவமதிப்பு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், தேசிய உணர்வை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால், ‘வந்தே மாதரம்’ பாடலை திட்டமிட்டு அவமதிப்பது, அல்லது பொதுவெளியில் அதை பாடுவதை தடுக்க முயற்சிப்பது போன்ற செயல்களுக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.

எனினும், இந்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. முதலில் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே அது சட்டமாக அமலுக்கு வரும். தற்போது இந்த மசோதா குறித்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Scroll to Top