பதில்:
- மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு பின்னால் அதிகம் பேசப்பட்ட மூன்று பெண்கள் இவர்கள்.
- கலிதா மாஜி, வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்திவந்தவர். பாஜக வேட்பாளராக போட்டியிட்டு அவுஸ்கிராம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
- ரேகா பாத்ரா, சந்தேஷ்காலி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் குரலாக தேசிய அளவில் அறியப்பட்டவர். ஹிங்கல்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்றார்.
- ரத்னா தேப்நாத், ஆர்.ஜி. கர் மருத்துவமனை வழக்கில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தாய். பெண்கள் பாதுகாப்பை முக்கிய பிரசாரமாக முன்வைத்து பனிஹாட்டி தொகுதியில் வெற்றி பெற்றார்.
- சாதாரண குடும்பங்களில் இருந்து வந்த இந்த மூவரின் வெற்றியை, மேற்கு வங்க அரசியலில் புதிய அத்தியாயமாக பலர் பார்க்கின்றனர்.


